திருநெல்வேலி சந்திப்பிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது, மேலத்திருவேங்கடம் என்ற தலம். இங்குள்ள திருவேங்கடநாதன் கோயிலில், கோயிலுக்கு வெளியே கொடிமரம் இருப்பது விசேஷம். இதில் கம்பத்தடியான் என்னும் தெய்வம் இருக்கிறது. உயரமான இடங்களில் பணிபுரிவோர், கட்டடம் கட்டும் தொழிலில் ஈடுபடுவோர் இங்கு வந்து கம்பத்தடியானை வழிபட்டால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்பது நம்பிக்கை!