உசிலம்பட்டி: மகா சிவராத்திரியை முன்னிட்டு உசிலம்பட்டி பகுதியில் உள்ள குல தெய்வ கோயில்களுக்கு மக்கள் திரளாக வழிபாட்டுக்கு வந்தனர். சிவராத்திரியில் குலதெய்வ கோயில்களுக்கு சென்று பூஜாரிகள், கோடாங்கிகளின் அருள்வாக்குகளும், ஆசிகளையும் பெற்று செல்வது வழக்கம். ஆனையூர் மீனாட்சியம்மன் சமேத ஐராவதீஸ்வரர் ஆலயம், திடியன் பெரியநாயகி சமேத கைலாசநாதர் ஆலயங்களிலம் மகாசிவராத்திரி சிறப்பு வழிபாடு நடந்தது. கருமாத்தூர் கடசாரி நல்லகுரும்பய்யர் கோயிலில் பூஜாரிகள் தொடர்பாக பிரச்னை இருப்பதால் வருவாய்த்துறை அலுவலர்கள் பூஜாரிகளாக பணியாற்றினர். பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் மாசிப்பச்சை வழிபாட்டுக்கு பக்தர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இந்த ஆண்டு பூஜை பெட்டிகள் செல்லவில்லை. அதிகமான வாகனங்களில் பக்தர்கள் குவிந்ததால் மதுரை, தேனி, பேரையூர் ரோடுகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.