Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவான்மியூர் மருந்தீசுவரர் ... அனுமந்தை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழா அனுமந்தை அங்காள பரமேஸ்வரி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
14ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு, நடுகல் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
14ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு, நடுகல் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

13 ஏப்
2017
01:04

ஓசூர்: ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை தாலுகா, சந்தனப்பள்ளி  கிராம ஏரிக்கரையில், அறம் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் கள ஆய்வு நடந்தது. அப்போது, மூன்றாம் குலோத்துங்க
சோழனின், 15ம் ஆட்சியாண்டு கல்வெட்டு மற்றும், 14ம்  நூற்றாண்டைச் சேர்ந்த குறுநில மன்னனுடைய நடுகல் ஆகியவை  கண்டுபிடிக்கப்பட்டன. இது குறித்து, அறம் வரலாற்று ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளர், கிருஷ்ணன் கூறியதாவது:  தேன்கனிகோட்டையைச் சேர்ந்தவர் கொடுத்த தகவலின் படி,  சந்தனப்பள்ளி அருகே ஏரிக்கரையில் கள ஆய்வு செய்தோம். இதில், சிவன் கோவில் இருந்திருக்க வேண்டும் என்பது தெரியவந்தது. அதற்கு அடையாளமாக, கருவறை தூண்கள் உள்ளன. கருவறை புதையலுக்காக தோண்டப்பட்டு, அங்கிருந்த சிவலிங்கம் மட்டும் தனியாக தூக்கி வீசப்பட்டுள்ளது. இப்பகுதியில்
கண்டுபிடிக்கப்பட்ட, மூன்றாம் குலோத்துங்க சோழனின், 15ம்  ஆட்சியாண்டு கல்வெட்டில், 13 வரிகள் உள்ளன. அவற்றில், 10  வரிகளை மட்டுமே படிக்க முடிகிறது; கடைசி, மூன்று வரிகளில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள  முடியாதவாறு, பாறை சிதைந்துள்ளது.இப்பகுதியில் கிடைத்துள்ள குறுநில மன்னனின் நடுகல்  சிற்பத்தில், கால்கள் இரண்டையும் மடக்கி, கைகள் இரண்டையும்  மார்புக்கு மத்தியில் குவித்து, தியான முத்திரையுடன் இருக்கிறது.

வலதுபுறத்தில் ஒரு குதிரையும், அதற்கு மேல், பெரிய அளவில்  வெண்கொற்றை குடையும், சிறிய அளவில் மேலும் ஒரு  வெண்கொற்றை குடையும் உள்ளது. மேலும் அதன் அருகில், இரு குடைகள் உயர்த்தி பிடிக்கப்பட்டுள்ளன. இதையொட்டி, மூன்று  சிறிய சிற்பங்கள், ஒரு பெரிய சிற்பம் செதுக்கப்பட்டுள்ளன.  இடதுபுறம், பெண் சிற்பம் நின்ற நிலையில் உள்ளது. இச்சிற்பம்  வீரனின் மனைவியாக இருக்கலாம். சிற்பத்தின் கீழ் பகுதியில்,  நான்கு பேர் இசை வாசிப்பது போல் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பவுர்ணமியில் இருந்து வரும் நான்காவது திதி சங்கடஹர சதுர்த்தியாகும். முழு முதற்கடவுளாகிய விநாயகப் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar