பதிவு செய்த நாள்
08
மே
2017
11:05
உசிலம்பட்டி: உசிலம்பட்டி தாலுகா நாட்டாமங்கலம் மூன்று தேவர் வகையறாக்களுக்கு
பாத்தியப்பட்ட ஆதிசிவன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மே 5 ல் காலை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கின.அன்று இரவு முதல் கால யாக வேள்விகள், மே 6ல் காலை 2 ம் கால பூஜையும், மாலை 3ம் கால பூஜையும் நடந்தன. காலை 4:30 மணிக்கு 4ம் கால பூஜைகள், லட்சுமி, கோ பூஜைகள் நடந்தன. காலை 7:28 மணிக்கு ஆதிசிவன் கோயில், ராஜகோபுரம், ஓங்கார சோனைமுத்து விநாயகர், வடக்கு வாசல் செல்லி அம்மன், பூர்ண புஷ்பகலாம்பாள், சமேத அய்யனார் கோயில்கள், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. வேத மந்திரங்கள் முழுங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
ஏற்பாடுகளை நாட்டாமங்கலம் 3 தேவர் வகையாறாக்கள், தங்கம் குரூப்ஸ் சேர்மன் ராஜாங்கம், பெரியவாகைக்குளம், சின்னவாகைக் குளம், சின்னவாகைக் குளம், பெருங்காமநல்லூர், நாட்டாமங்கலம், அய்யம்பட்டி, சக்கரைப்பட்டி, நாகலாபுரம் கிராம மக்கள் செய்திருந்தனர்.