பதிவு செய்த நாள்
24
மே
2017
11:05
கரூர்: மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, முல்லை நகர் மக்கள் பால்குட ஊர்வலம் எடுத்து சென்றனர். கரூர், காந்திகிராமம் மஹா மாரியம்மன் கோவில் திருவிழாவை
முன்னிட்டு, கடந்த, 19ல் கோவிலில் பூத்தட்டு விழா நடந்தது.
தொடர்ந்து, 21ல் வடிசோறு, மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று, முல்லை நகர், இ.பி.காலனி, ஜெ.ஜெ., நகர் உள்ளிட்ட
பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள், பால்குட ஊர்வலம் எடுத்து வந்து, முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு சென்று சுவாமிக்கு பூஜைகள் செய்தனர். நாளை (மே, 24) கோவிலிருந்து கம்பம் ஆற்றுக்கு எடுத்து செல்லப்படும் நிகழ்ச்சி நடக்கிறது.