அய்யாவாடி பிரத்தியங்கிரா கோயிலில் நிகும்பலா யாகம்: பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூன் 2017 05:06
மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடி கிராமத்தில் மகா பிரத்தியங்கிரா தேவி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆனி அமாவாசையை முன்னிட்ட மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் நடைபெற்றது. மிகவும் சக்தி வாய்ந்த இந்த யாகத்தில் கலந்துகொண்டு அம்பாளை சரனடைந்தால் சத்ரு உபாதைகள் நீங்கி, சகல நன்மைகளும் கிடைக்கும். அமாவாசை தினத்தை முன்னிட்டு, காலை அம்பாளை கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. மதியம் 1 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, தண்டபாணி குருக்கள் யாக குண்டத்தில் மிளகாய் வற்றளை சேர்த்து நிகும்பலா யாகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து மகா பிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை ரைிசனம் செய்தனர்.