பதிவு செய்த நாள்
05
ஜூலை
2017
01:07
புதுச்சேரி : நரம்பை நாக முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 9ம் தேதி நடக்கிறது. நரம்பை கிராமத்தில் உள்ள நாகமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நாளை (6ம் தேதி) காலை 8:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் துவங்குகிறது. அதைத்தொடர்ந்து மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், தன பூஜை, கோ பூஜை நடக்கிறது. 7ம் தேதி மாலை 4:00 மணிக்கு புனித மண் எடுத்தல், புனித நீர் திரட்டுதல், முதற்கால யாக பூஜை நடக்கிறது. 8ம் தேதி காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகள், 10:00 மணிக்கு பீடஸ்தாபனம், யந்திர ஸ்தாபனம், மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. 9ம் தேதி காலை 6:45 மணிக்கு மகா காளியம்மன் கோவில், 7:05 ஆலியப்பன் கோவில், 7:30 மணிக்கு பூர்ணபுஷ்கலா சமேத வீரன் கோவில், ௯:30 மணிக்கு நாகமுத்து மாரியம்மன் விமானம் மற்றும் ராஜகோபுரத்திற்கும், 10:00 மணிக்கு நாகமுத்து மாரியம்மன் மூலவருக்கு கும்பாப।ஷேகம் நடக்கிறது. மதியம் 1:30 தீபாராதனை நடக்கிறது.