பதிவு செய்த நாள்
07
ஆக
2017
12:08
பழநி: ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக, ஆக., 15க்குபின், பழநி முருகன் கோவில், ’ரோப் கார்’ ஒரு மாதம் நிறுத்தப்பட உள்ளது. பழநி முருகன் கோவில், ’ரோப் கார்’ தினமும் காலை, 7:00 முதல் இரவு, 9:00 மணி வரை இயக்கப்படுகிறது. தினமும் பராமரிப்பு பணிக்காக, பகல், 1:30 முதல், 2:30 மணி வரை நிறுத்தப்படும்.மேலும், ஆண்டிற்கு ஒரு மாதம், பராமரிப்பு பணிகளுக்காக, ’ரோப் கார்’ நிறுத்தப்படுவது வழக்கம். அப்போது, ரோப் கார் கம்பிவடம், உருளை, பல் சக்கரங்கள் உள்ளிட்ட பாகங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படும். தேய்மானம் அடைந்த உபகரணங்கள் மாற்றப்படும். இந்த ஆண்டு பராமரிப்பு பணி, ஆக., 15க்கு பின் மேற்கொள்ளப்பட உள்ளது.