பதிவு செய்த நாள்
14
ஆக
2017
03:08
மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்த கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக, அனைத்து பகுதியில் உள்ள கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தன. உடுமலை நவநீதகிருஷ்ணன் கோயிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். சோலிங்கநல்லூர் இஸ்கான் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் லலித்தா, கிருஷ்ணா, ராதா, விஷாகா அருள்பாலித்தனர். கோவை கொடிசியா அருகேயுள்ள இஸ்கான் ஜெகன்னாதர் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பலதேவர், சுபத்ராதேவி, ஜெகன்னாதர் அருள் பாலித்தனர். ராயப்பேட்டை கவுடிய மடம் கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருத்தணி பகுதியில் உள்ள கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தன. திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி கிராமத்தில், உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. அனைத்து கோயில்களிலும் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.