பதிவு செய்த நாள்
22
ஆக
2017
12:08
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, மாரியம்மன், செல்வகணபதி கோவில் கும்பாபி?ஷகம், வரும், 27ல் நடக்கவுள்ளது. நேற்று முன்தினம் காலை, பெருமாள் கோவிலில் இருந்து முகூர்த்த கால் மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, நடப்பட்டது. தொடர்ந்து, முளைப்பாரி போடப்பட்டது. வரும், 24ல் கிராம சாந்தி; 25ல் கஜபூஜை, கோ, அஸ்வ பூஜை, வேதபாராயணம் ஆகியவை நடக்கின்றன. பெருமாள் கோவிலில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக எடுத்து வரப்படும். இரவு, 7:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை நடக்கிறது. 26ல் மூன்றாம் கால யாக பூஜை பஞ்சகவ்ய பூஜை நடக்கிறது. நான்காம் கால யாக பூஜை மாலை, 3:30 மணிக்கும், சேலம் வெங்கடேஷ்வர சுவாமிகளின் ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது. தொடர்ந்து, 27 காலை, 7:30 மணிக்கு கொடி மர பூஜை, செல்வகணபதி, மாரியம்மன், கொடி மரத்திற்கு கலச கும்ப தீர்த்தம் ஊற்றி கும்பாபி?ஷகம் நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.