திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயிலில் நாளை புரட்டாசி சனி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2017 12:09
ஸ்ரீவில்லிபுத்துார், திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நாளை (செப்.23)அதிகாலை 3 :00 மணிக்கு நடை திறக்கபடுகிறது. இதை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனைகள் செய்யபட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபடுவார்கள். பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அறநிலையத்துறை செய்துள்ளது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் படி, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யபட்டுள்ளது, செப்.23, 30 மற்றும் அக்.7.14.21 ஆகிய 5 சனிக்கிழமைகளில் அதிகாலை முதல் நடைதிறக்கபட்டு பக்தர்கள் அனுமதிக்கபடுகிறார்கள். ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் ராமராஜா மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் செய்துள்ளனர்.