பதிவு செய்த நாள்
09
அக்
2017
12:10
கிருஷ்ணகிரி: வரட்டனப்பள்ளி, லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், ஐந்தாம் ஆண்டு உற்சவ விழா நடந்தது. பர்கூர் ஒன்றியம், வரட்டனப்பள்ளி, லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், புரட்டாசி, மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, ஐந்தாம் ஆண்டு உற்சவ திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி காலை, 8:00 மணிக்கு விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 4:00 மணிக்கு, உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மேள, தாளம் முழங்க திருவீதி உலா நடந்தது. இதில், பக்தர்கள் சுவாமி வேடம் அணிந்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். சுவாமி ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக சுற்றி வந்து, இரவு, 11:30 மணிக்கு கோவிலை வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சியில், ஏராளமானோர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.