கூடலுார், மேலக்கூடலுார் மந்தையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த கோலப்போட்டியில் பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதையொட்டி நகராட்சி 1வது வார்டில் உள்ள முக்கியத் தெருக்களில் ஏராளமான பெண்கள் காய்கறிகள் மூலமும், 1 ரூபாய் மற்றும் 2 ரூபாய் நாணயங்கள் மூலமும் கோலம் போட்டனர். இதில் வெற்றி பெற்ற பெண்களுக்கு விழாக்குழுவினர் சார்பில் பரிசு வழங்கப்பட்டன. மந்தைம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது.அதிகாலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். கரகாட்டம் மற்றும் கலைநிகழ்ச்சி நடந்தன. கூடலுாரில் இருந்து லோயர்கேம்ப் வரை சைக்கிள் போட்டி நடந்தது. மாலையில், பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.