திருப்பதி: திருமலை திருப்பதி வரும் பக்தர்களுக்கு வருடம் 365 நாளும் அன்னதானம் காலை முதல் இரவு வரை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதற்கென தறிகொண்ட வெங்காமாம்பா நினைவு கட்டிடம் தனியாக இயங்கிக்கொண்டு இருக்கிறது.
இந்த அன்னதானத்திற்கென பக்தர்கள் குவித்த நன்கொடை 850 கோடி ரூபாயாகும். இந்த தொகை பாங்கில் டெப்பாசிட் செய்யப்பட்டு அதில் இருந்து வருடத்திற்கு வரக்கூடிய வட்டி 60 கோடி ரூபாயுடன் தேவஸ்தானத்தின் பங்களிப்பாக 30 கோடி ரூபாயும் சேர்த்து 90 கோடி ரூபாய் திட்டத்தில் அன்னதானம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அன்னதானம் தற்போது வைகுந்தம் வரிசையில் நிற்பவர்களுக்கும் கொண்டு போய் கொடுக்கப்படுகிறது மேலும் திருமலை வரும் பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் நீர்மோரும் வழங்கப்படுகிறது. தீபாவளிக்கு கூடுதல் பக்தர்கள் வருவார்கள் அவர்களுக்கான ஏற்பாடுகளில் ஒன்றாக அன்னதான நிலையத்தை பார்வையிட்ட அதிகாரிகள் பக்தர்கள் சார்பில் சொல்லப்பட்ட ஆலோசனைகளையும் குறித்துக் கொண்டனர்.