பதிவு செய்த நாள்
17
அக்
2017
11:10
கரூர்: கரூர் புனித தெரசம்மாள் ஆலய தேர்த் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான கிறிஸ்த வர்கள் பங்கேற்றனர். கரூரில், பிரசித்தி பெற்ற புனித தெரசம்மாள் ஆலய தேர்த்திருவிழா, ஆண்டுதோறும் சிறப்பாக நடக்கிறது. நடப்பாண்டு, 87வது ஆலய தேர்த்திருவிழா கடந்த, 6ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து கடந்த, 14 வரை நாள்தோறும் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆராதனை, வேண்டுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை திருப்பலி, ஆயருக்கு வரவேற்பு, திருவிழா திருப்பலி நடந்தது. இதையடுத்து, வேண்டுதல் திருத்தேர் பவனி, மாலை ஆடம்பர கூட்டு பாடற்பலி நடந்தது. இரவு, 8:00 மணிக்கு புனிதையின் திருவுருவம் தாங்கி, மின் அலங்காரத்துடன், நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது. நேற்று காலை திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நடந்தது. ஏற்பாடுகளை, பங்கு தந்தை இராயப்பன் மற்றும் பங்கு மக்கள் செய்தனர்.