பதிவு செய்த நாள்
30
அக்
2017
12:10
கொடைக்கானல்: கொடைக்கானலில் ஸ்ரீதேவி, பூதேவி, வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் 48 வது மண்டல பூஜை விழா நடந்தது.நேற்று காலை 8:45 மணியளவில் மங்கள இசையுடன், விக்னேஸ்வர பூஜை, யாகசலை சங்கல்பம், அனுக்ஞை, புண்யாகவாசனம், பகவத் பிரார்த்தனையும், காலை 9:30 மணியளவில் அக்னி பிரதிஷ்டை, கும்ப பூஜையும், 10:00 மணியளவில் கணபதி ஹோமம், பஞ்சசூக்த ஹோமம், லட்சுமி நரசிம்ம சுதர்ஷன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், பிரதான ஹோமங்கள், திருமஞ்சன நிகழ்ச்சியும நடந்தன. காலை 10:45 மணியளவில் பூர்ணாஹூதி, கும்பம் புறப்பாட நடந்தது. 11:00 மணியளவில் கும்ப திருமஞ்சன நிகழ்ச்சியும், 11:30 மணியளவில் திருவாராதனம், சற்றுமுறை, யஜமானர் மரியாதை, பிரஸாத வினியோகமும், 12:00 மணியளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வரதராஜப்பெருமாள் கோயில் கும்பாபிஷேக கமிட்டியினர் செய்திருந்தனர்.