பதிவு செய்த நாள்
17
நவ
2017
12:11
ஊத்துக்கோட்டை : அங்காள பரமேஸ்வரி கோவிலில், வரும், 18ம் தேதி, அமாவாசை தினத்தையொட்டி, ஊஞ்சல் சேவை நடைபெற உள்ளது. பூண்டி ஒன்றியம், பென்னலுார்பேட்டை கிராமத்தில் உள்ளது, அங்காள பரமேஸ்வரி கோவில். இக்கோவிலில், வரும், 18ம் தேதி, அமாவாசை தினத்தையொட்டி, ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்றைய தினம், காலை, 10:30 மணிக்கு அம்மனுக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறும். தொடர்ந்து, மாலை, 6:00 மணி முதல், நள்ளிரவு, 12:00 மணி வரை, ஊஞ்சல் சேவை நடைபெற உள்ளது.