பதிவு செய்த நாள்
07
டிச
2017
12:12
செங்கல்பட்டு: திருவடிசூலத்தில், நித்ய சிரஞ்சீவி பக்த அனுமன் கோவில் மஹாகும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடந்தது. செங்கல்பட்டு அடுத்த, திருவடிசூலம் கோவில்புரத்தில், வெங்கேடசப்பெருமாள் கோவில் உள்ளது. வளாகத்தில், நித்ய சிரஞ்சீவி பக்த அனுமான் சிலை, 18 அடி யில், நிறு வப்பட்டு, புதிய கோவில் கட்டப்பட்டது. இதன் திருப்பணிகள், சில தினங்களுக்கு முன் முடிந்தன. கடந்த, 5ம் தேதி, கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு, சிறப்பு பூஜைகளுடன், கலசங்கள் புறப்பட்டது. ஆதி பரமேஸ்வரி தேவி கருமாரியம்மன் மஹா ஆரண்ய சேஷத்திரம் ஸ்தாபகர் மற்றும் மருளாளர் மதுரை முத்து சுவாமிகள் முன்னிலையில், கோபுர கலசங்களுக்கு, புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. சென்னை உட்பட பல இடங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்ேகற்று, சுவாமியை வழிபட்டனர். செங்கல்பட்டு தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.