பதிவு செய்த நாள்
09
டிச
2017
11:12
பழநி: சபரிமலை சீசனை முன்னிட்டு, பழநி முருகன்கோயில் உண்டியலில் 22 நாட்களில் ரூ. ஒருகோடியே 82 லட்சத்து 4 ஆயிரம் கிடைத்துள்ளது. கார்த்திகை மாதம் சபரிமலை சீசனைமுன்னிட்டு பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் 22 நாட்களில் நிரம்பிய, உண்டியல்கள் திறக்கப்பட்டு கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது. இதில் ரொக்கமாக ரூ. ஒருகோடியே 82லட்சத்து 04ஆயிரத்து 851ம், தங்கம் -765கிராம், வெள்ளி- 6,950 கிராம், வெளிநாட்டு கரன்சி- 1468 கிடைத்துள்ளது. தங்கத்திலான காவடி ஒன்று உட்பட தாலி, மோதிரம், வேல், ஆள்ரூபம் உள்ளிட்ட தங்கம், வெள்ளி பொருட்கள் கிடைத்துள்ளது. இணைஆணையர் செல்வராஜ், துணைஆணையர் மேனகா, முதுநிலை கணக்கீட்டாளர் மாணிக்கவேல், வங்கிப்பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.