மேலுார்: மேலுாரில் காளியம்மன் கோயிலைச் சுற்றி குளம் போல் கழிவுநீர் தேங்கி உள்ளதால், பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். கஸ்துாரிபாய் நகர், அனுமார் கோயில் தெரு உள்ளிட்டபகுதிகளின் கழிவுநீர் 7வது வார்டு மண்கட்டி தெப்பக்குளம்அருகிலுள்ள கால்வாய் வழியாக பட்டாளம் கண்மாயை அடைகிறது. இக்கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவு நீர் காளியம்மன் கோயிலை சுற்றி நிறைந்துள்ளதால்பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
வெங்கட்ராமன்: கழிவுநீர் கோயில் வளாகத்திற்குள் 7 நாட்களாக தேங்கி கிடப்பதால் துர்நாற்றத்துடனும் சுகாதார கேடாகவும் உள்ளது. தவிர கோயிலில் பொங்கல் வைத்து சாமி கும்பிட முடியாமல் பெரிதும் மன உளைச்சலாக உள்ளது. கழிவுநீர் தேங்கியது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை சொல்லியும்நடவடிக்கை இல்லை. அதனால் அதிகாரிகள் ஆய்வு செய்து கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.