பதிவு செய்த நாள்
13
மார்
2018
01:03
கிருஷ்ணராயபுரம்: சிவாயம் கன்னிமார் சுவாமி, கருப்புசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயத்தில், பழமையான கன்னிமார் சுவாமி, கருப்புசாமி கோவில் உள்ளது. இங்குள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. ஆண்டுதோறும் மாரியம்மன் கோவில் திருவிழா மூன்றாம் நாளில், கன்னிமார் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு, 12:00 மணியளவில், கன்னிமார், கருப்புசாமிகளுக்கு, மலர் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். இரும்பூதிப்பட்டி, பாப்பகாப்பட்டி, கோவில்பட்டி, அய்யர்மாலை, கந்தன்குடி சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.