Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுகவனேஸ்வரர் கோவில் யானைக்கு தொடர் ... ஜெனகை நாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் ஜெனகை நாராயணப் பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் கற்கள் பதிக்க பாரம்பரிய முறை கலவை
எழுத்தின் அளவு:
நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் கற்கள் பதிக்க பாரம்பரிய முறை கலவை

பதிவு செய்த நாள்

19 மார்
2018
12:03

திருவிடந்தை: நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், தரைக்கற்கள், பாரம்பரிய முறையில் இணைக்கப்படுகின்றன. மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவில், 108 வைணவ கோவில்களில், 62ம் கோவில் ஆகும். இக்கோவிலை, தமிழக இந்து சமய அறநிலையத்துறை, வழிபாடு சார்ந்தும், தொல்லியல் துறை, பாரம்பரிய சின்னம் சார்ந்தும் நிர்வகிக்கின்றன. திருமணம், மகப்பேறு, ராகு, கேது பரிகார கோவிலாக விளங்கும் இக்கோவிலின் கும்பாபிஷேகம், 2006ல் நடந்தது. தற்போது மீண்டும் நடைபெற உள்ள நிலையில், கோவில் மண்டபம், தரைத்தளங்களில் புனரமைப்பு பணிகளை, தொல்லியல் துறை மேற்கொண்டுள்ளது.

இத்துறை, மஹா மண்டப மேல்தள கான்கிரீட், கற்களை முற்றிலும் அகற்றி, கனத்தை குறைத்து, மீண்டும் கற்கள் பொருத்தி சீரமைத்தன. மண்டபம் உள்ளிட்ட பகுதி தரைத்தள, கான்கிரீட் தரையை முற்றிலும் அகற்றி, கற்களில் தரைத்தளம் அமைக்கிறது. தற்காலத்தில், கற்களை இணைக்க, ஆற்று மணல், சிமென்ட் கலவை பயன்படுத்தப்படும் நிலையில், தொல்லியல் துறை, கோவிலின் பழங்கால தன்மை கருதி, பாரம்பரிய முறையிலான கலவையை பயன்படுத்துகிறது. துாய மணலுடன், சுண்ணாம்பை கலந்து, பல நாட்கள் ஊற வைத்த கலவையில், கடுக்காய், வெல்லம் கலந்து, இரு வாரம் ஊறவைத்த பின் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை தேவைக்கேற்ப கலந்து, பதிக்கப்பட்ட கற்களின் இடைவெளி பகுதியில் நிரப்பி, உறுதிப்படுத்தப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar