பதிவு செய்த நாள்
19
ஏப்
2018
11:04
சேலம்: யானை கருணைக் கொலை விவகாரத்தில், 12 மணி நேரம் ஆலோசித்து, டாக்டர்கள் குழுவினர் அறிக்கை தயாரித்தனர்.சேலம், சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரி, 42; உடல் நலம் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையான நிலையில், உயர் நீதிமன்றம், கருணை கொலை செய்ய உத்தரவிட்டது. இதற்காக, அறிக்கை தயாரித்து அனுப்பவும் அறிவுறுத்தியது.நேற்று, சென்னை கால்நடை மருத்துவ கல்லுாரியைச் சேர்ந்த ஜெயதங்கராஜ் தலைமையில், டாக்டர்கள், ஒரு மணி நேரம் ஆய்வு செய்தனர். அப்போது, யானைக்கு இதுவரை வழங்கிய மருந்து, உடலில் ஏற்பட்ட பாதிப்பு விபரம் சேகரிக்கப்பட்டது.சேலம் மண்டல, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் லோகநாதன் கூறுகையில், யானை உடல்நிலை அறிக்கை தயார் செய்யும் பணி, காலை, 11:00 மணி முதல் நடந்து வருகிறது. இரவு, 11:00 மணிக்கு அறிக்கை தயாராகும். 19ம் தேதி காலை அனுப்பி விடுவோம், என்றார்.