சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2018 11:04
ஆண்டிபட்டி : சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை விழாவின் ஐந்தாம் நாளில் அம்மன் ஸ்ரீ நாகவர்ஷினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோயில் விழா ஏப்ரல் 17 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு 7:00 மணிக்கு அம்மன் கோயில் வளாகத்தில் பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்து அருள்பாலித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவில் நாகவர்ஷினியாக அலங்கரிக்கப்பட்டு அருள்பாலித்தார். விழாவில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தன. கோயில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.