மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிலம் 68 ஏக்கர் ஆக்கிரமிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மே 2018 01:05
மதுரை, மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகே மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 68 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. இது குறித்து தமிழ்நாடு திருத்தொண்டர்கள் சபையின் தலைவர் ராதா கிருஷ்ணன், தாசில்தார்கள் கோ.சிவக்குமார், எஸ்.எஸ்.சிவக்குமார் ஆய்வு செய்தனர். ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மதுரை மீனாட்சி அம்மன் , திருப்பரங்குன்றம், பிள்ளையார் பட்டி கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். மீனாட்சி கோயிலுக்கு சொந்தமான 68 ஏக்கர் நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்துள்ளனர். இந்த நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள கோயில் ஆக்கிரமிப்பு குறித்து ணூடுtணடிணஞீடிச்@ஞ்ட்ச்டிடூ.ஞிணிட்ல் தகவல் தெரிவிக்கலாம், என்றார்.