பதிவு செய்த நாள்
18
மே
2018
01:05
திருத்தணி : ஷீரடி சாய்பாபா கோவில்களில், பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள, ஷீரடி சாய்பாபா கோவில்களில், வியாழக்கிழமையை ஒட்டி நேற்று, மூலவருக்கு பாலாபிஷேக உற்சவ விழா நடந்தது.அதிகாலை, 5:00 மணிக்கு, சுப்ரபாதம், காலை, 5:30 மணிக்கு காகட ஆரத்தி நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு பால் அபிஷேகம் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. மாலையில் சந்திய ஆரத் மற்றும் சேஜ் ஆரத்தி நடந்தது.இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். இதே போல், நகரி பகுதியில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலிலும், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.