வழுதாவூர்:நெற்குணம் ராமேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. வழுதாவூர் அடுத்த நெற்குணம் கிராமத்தில் பழமையான ஆனந்த விநாயகர், ராமேஸ்வரர், பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கோவில் வாளகத்தில் உள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, ராமேஸ்வரர், விநாயகர், பாலமுருகன் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. நெற்குணம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசதனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இக்கிராமத்தில் உள்ள சிவன் கோவில், லிங்கத்துடன் விநாயகர் மற்றும் பாலமுருகன் சுவாமி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், திருமங்கலம் சிதம்பரேஸ்வரர் கோவில், வழுதாவூர் கயிலாயநாதர் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.