பதிவு செய்த நாள்
18
ஜூன்
2018
12:06
குளித்தலை: மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் பால் குடம் எடுத்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். குளித்தலை அடுத்த மேட்டுமருதூர் கிழக்குதெரு மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று காலை பால் குட ஊர்வலம் நடந்தது. மருதூர் காவிரி ஆற்றிலிருந்து, பக்தர்கள் பால் குடம், தீர்த்தக் குடம் எடுத்து வந்தனர். மாரியம்மன், செல்லாண்டியம்மன், காளியம்மன் கோவிலை வலம் வந்து, கிராம வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். அதன்பின், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. விழாக் குழுவின் சார்பில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, கல்லுப்பாலத்தில் கரகம் பாலித்து, வீடு, வீடாக பூஜை வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதேபோல், சின்னையம்பாளையம் மாரியம்மன்கோவில் திருவிழாவையொட்டி, கடம்பர்கோவில் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்த குடம். பால் குடம் எடுத்து, பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.