மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆனி பவுர்ணமியில் முப்பழ அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூன் 2018 12:06
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஜூன் 28 மூலஸ்தான சொக்கநாதருக்கு முப்பழ பூஜை நடக்கிறது. ஒவ்வொரு பருவ காலத்திற்கும் ஒவ்வொரு வகையான திரவியங்களை கொண்டு ஆகம விதிகள்படி இறைவனுக்கு அபிஷேகம் நடக்கிறது. ஜூன் 28 ஆனி பவுர்ணமியன்று உச்சிகால வேளையில் சொக்கநாதருக்கு மா, பலா, வாழை முக்கனிகளால் முப்பழ பூஜை, அபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி சித்திரை வீதிகளில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் பஞ்ச மூர்த்தி புறப்பாடு மற்றும் ஜூன் 27 அருணகிரிநாதர் ஜெயந்தியை முன்னிட்டு இரவு 8:00 மணிக்கு ஆவணி மூல வீதி புறப்பாடு நடக்கிறது. விழா நாட்களில் கோயில் மற்றும் உபயதாரர் சார்பில் உபய திருக்கல்யாணம், தங்க ரத உலா பதிவு செய்திட இயலாது என இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்தார்.