சிவகாசி: சிவகாசி அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோவில் ஆண்டுதோறும் ஆடிதபசு திருவிழா நடைபெறும். இந்தாண்டு ஆடித்தபசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. உற்ஸவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதி உலா நடை பெற்றது. ஊஞ்சலில் அம்பாள் புறப்பாடு நிகழ்ச்சி மற்றும் மாலை காமதேனு வாகனத்தில் அம்பாள் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 18)நடைபெற உள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் அம்பாள் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.வருகின்ற ஜூலை 31 ம் தேதி உற்சவ சாந்தி நடைபெறுவதோடு திருவிழா முடிவடைகிறது.