பதிவு செய்த நாள்
21
ஜூலை
2018
12:07
காஞ்சிபுரம்: ஆடி முதல் வெள்ளியை ஒட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர்.
ஆடி மாதம், அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஜூலை, 17ல், ஆடி பிறந்ததில் இருந்து, அம்மன் கோவில்களில், ஆடித்திருவிழா விழா களை கட்ட துவங்கியுள்ளது. ஆடி முதல் வெள்ளியான நேற்று, காஞ்சிபுரத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு வீதியுலா நடந்தது. காஞ்சி காமாட்சிஅம்மன் கோவில், ஆதிபீட பரமேஸ் வரி காளிகாம்பாள் கோவில் களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்பாளை தரிசனம் செய்தனர். ரயில்வே ரோடு பரஞ்சோதியம்மன் கோவில் மற்றும் பெரிய காஞ்சிபுரம் சந்த வெளியம்மன் கோவில் களில், நாக சிலைகளுக்கு பெண்கள் பூஜை செய்தும், அம்மனுக்கு பொங்கல் வைத்தும் வழிபட்டனர். அதுபோல, வீடுகளிலும் கூழ் ஊற்றுதல் மற்றும் வெள்ளிக்கிழமை வழிபாடு நடந்தது.