வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11அக் 2018 10:10
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இங்கு வீற்றிருக்கும் முத்தாலம்மனுக்கு புரட்டாசியில் விழா நடைபெறும். ஒருவாரம் நடக்கும் இவ்விழாவின் இறுதி நாளில் தேரோட்டம் நடைபெறும். அன்று ஒருநாள் மட்டும் அம்மன் , கோயிலில் உருவமாக எழுந்தருளி அருள்பாலிப்பார். மற்ற நாட்களில் பீடத்திற்கு மட்டுமே வழிபாடு நடைபெறும்.
இந்நாளில் அம்மனை பல்வேறு ஊர்களிலிருந்து வரும் ஏராளமான பக்தர்கள் வழிபடுவார்கள். அதன்படி திருவிழாவின் இறுதிநாளான நேற்று தேரோட்டம் நடந் தது. அதிகாலையில் அம்மன் தேரில் எழுந்தருள, தேர் ரதவீதிகள் வழியாக சென்று நிலையை அடைந்தது. அம்மன் மேளதாளங்கள் முழங்க கோயிலில் எழுந்தருளினார்.அங்கு சிறப்பு பூஜைகள், மஞ்சள் நீராட்டு நடந்தது. தொடர்ந்து இரவு மாவிளக்கு வழிபாடு, அம்மன் அருள்வாக்கு சொல்தல் நடந்தது. இதன்பின் அம்மன் ’பிரியாவிடை’ நிகழ்ச்சி நடந்தது. அம்மனை நீரில் கரைப்பதற்காக பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க எடுத்துச் சென்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலை சுற்றிலும் நின்று பூக்களை துாவியும் குலவையிட்டு அம்மனை வழியனுப்பி வைத்தனர். கோயில் செயல்அலுவலர் சுந்தர்ராஜன், பக்தசபா தலைவர் சுந்தர்ராஜன், செயலாளர் விவேகானந்தன் ஏற்பாடுகளை செய்தனர்.