அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் உள்ள 150 ஆண்டுகள் புகழ் வாய்ந்த மலையரசன் கோயிலில் புரட்டாசி மாத உற்ஸவ விழா நடந்தது. பெருமாளுக்கு பலவித மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு காட்சி அளித்தார். சிறப்பு அபிேஷகம், தீபாரதனைகள் நடந்தது. இரவில் சுவாமி கருட வாகனத்தில் பவனி வந்தார். நகராட்சி முன்னாள் கவுன்சிலர் கண்ணன் அன்னதானம் வழங்கினார். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் வீராச்சாமியின் தலைமையில் விழா குழுவினர் செய்தனர்.