திருமலையில் சக்ரஸ்நானத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18அக் 2018 03:10
திருப்பதி: திருப்பதி திருமலையில் கடந்த ஒன்பது நாட்களாக நடந்து வந்த நவராத்திரி பிரம்மோற்சவம் சக்ரஸ்நானத்துடன் நிறைவு பெற்றது.
சக்ரஸ்நானத்தை முன்னிட்டு கோயில் குளத்தில் தேவியருடன் எழுந்தருளிய உற்சவரான மலையப்பசுவாமிக்கு தேன், பன்னீர், சந்தனம், இளநீர், பால், பஞ்சாமிர்தம் உள்ளீட்ட பலவித மங்கள பொருட்களால் அபிசேகம் நிகழ்த்தப்பட்டது. பின்னர் சங்குசக்கர வடிவிலான பெருமாளை கோவில் பட்டர்கள் எடுத்துச் சென்று வேதமுழக்கங்கள் முழங்க குளத்தில் நீராட்டினர். கோவில் படிக்கட்டுகளில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் நீராடினர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட சுவாமியும் தேவியரும் ஊர்வலமாக கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது.