பதிவு செய்த நாள்
17
டிச
2018
12:12
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நாளை நடக்கிறது.திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், 7ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியது. 8ம் தேதியில் இருந்து, பகல்பத்து உற்சவம் நடந்தது. நாளை காலை, பரம பத வாசல் திறப்பு நடக்கிறது. பகல் பத்து உற்சவத்தின், 10ம் நாளான இன்று (டிசம்., 17ல்), நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.
நாளை (டிசம்., 18ல்) காலை, 5:30 மணிக்கு, சொர்க்கவாசல் என்ற, பரமபத வாசல் திறப்பு நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வருவர் என்பதால், 4,000த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.