கோவை: சித்தாபுதூர் ஐயப்பசுவாமி கோவிலில், நாளை (பிப்., 19ல்) நாக பூஜை நடக்கிறது. நியூசித்தாபுதூர், சின்னசாமி நாயுடு சாலையில் அமைந்துள்ள ஐயப்பசுவாமி பொற்கோவிலில், நாளை காலை, 9:00 மணிக்கு, நாகராஜாக்களுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
பாம்புமேக்காட்டில்லத்து ஸ்ரீதரன் நம்பூதிரி தலைமையில் பால் கொடுத்தலும், மாலை சர்ப்ப பூஜையும் நடக்கிறது.நாகதோஷ பரிஹாரம் செய்ய விரும்புவோர், கோவில் அலுவலகத்தில் நேரில் வந்தோ அல்லது 0422 - 252 3027 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டோ, முன்பதிவு செய்து கொள்ளலாம்.