பதிவு செய்த நாள்
18
பிப்
2019
03:02
அனுப்பர்பாளையம்:கிரிவலம் செல்ல, பக்தர்களுக்கு மக்கள் நல அறக்கட்டளையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.திருப்பூர், காலேஜ் ரோட்டில் புகழ்பெற்ற கொங்கணகிரி கந்த பெருமான் கோவில் உள்ளது. கோவிலில், மக்கள் நல அறக்கட்டளை சார்பில், திருப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
ஐந்து நிலை கொண்ட ராஜ கோபுரம், கோவில் கருவறை, உள் வளாகம் உள்ளிட்டவற்றில் வர்ணம் பூசுதல், குடிநீர், கழிப்பறை வசதி, வாகன நிறுத்தம், கோவில் வளாகத்தில் மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பக்தர்கள் பவுர்ணமியன்று கிரிவலம் செல்ல கோவில் பிரகாரத்தை சுற்றி, 500 மீ., தூரம் கொண்ட, 20 அடி அகலத்தில் கானகிரீட் தளத்தில் கிரிவல பாதை அமைக்கப்பட்டுள்ளது. பாதையில், 50 அடி தூரத்திற்கு ஒன்று என, 25 மின் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.
இரு பக்கமும் மரக்கன்று நடப்பட்டு, சொட்டு நீர் பாசனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாளை, பவுர்ணமியன்று கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு மக்கள் நல அறக்கட்டளையினர் அழைப்பு விடுத்துள்ளனர். இதையொட்டி, பணிக்கம்பட்டி சுப்ரமணியம் குழுவினரின் கும்மியாட்டம் நடக்கிறது.