காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் விழா மார்ச் 12ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2019 02:02
காரைக்குடி : காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி - பங்குனி விழா வரும் மார்ச் 12-ம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுடன் தொடங்குகிறது.19-ம் தேதி இரவு கரகம், மது, முளைப்பாரி ஊர்வலமும், 20-ம் தேதி பூக்குழி, பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும் மாலை கரகம் பருப்பூரணியில் சேர்த்தல் நிகழ்ச்சியும், இரவு 8:00 மணிக்கு காப்பு பெருக்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 21-ம் தேதி அன்னையின் திருவீதி உலா, 22-ம் தேதி மாலை சந்தன காப்பு அலங்காரம் நடக்கிறது.
ஏற்பாடுகளை தக்கார் ராமசாமி, செயல் அலுவலர் அகிலாண்டேஸ்வர், கணக்கர் அழகுபாண்டி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். முன்னதாக வரும் 26-ம் தேதி இரவு 7:00 மணிக்கு பூச்சொரிதல் விழா நடக்கிறது.