கிள்ளை: சிதம்பரம் கிள்ளை ரயில்வே சாலையில் கோவிலாம்பூண்டியில் ரயில்வே சாலையில் அருள் பாலிக்கும் சிவன் கோவிலில் தினசரி சுற்றுபகுதியினர் சுவாமி தரிசனம் செய்வதில் ஆர்வம் செலுத்துகின்றனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் –கிள்ளை ரயில் பாதையில் கோவிலாம்பூண்டி கிராமம் உள்ளது. இந்த சிவன் கோவில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ரயில்வே பாதை அமைக்கும் போது கண்டு பிடிக்கப்பட்டு இந்த கோவிலை அப்புறப்படுத்த சில ஆங்கிலேய பொறியாளர்கள் முயற்சி செய்த போது பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டதால் கோவிலை அப்புறப்படுத்தாமல் விட்டு ஆங்கியர்கள் இங்கு சுவாமி தரிசனம் செய்துள்ளதாக பலரும் கூறுகின்றனர். ரயில்வே சாலைக்கும் கோவிலுக்கும் 10 அடி தூரம் உள்ளதால் கேங்மென் உள்ளிட்ட ரயில்வே ஊழியர்கள் காவல் தெய்வமாக வணங்குகின்றனர். இக்கோவில்வில் பக்தர்கள் கோரிக்கை உடனுக்குடன் நிறைவேற்றப்படுவதால் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த பலரும் முக்கிய விசேஷ தினங்களில் தரிசனத்திற்கு வருவதை வாடிக்கயைாக கொண்டுள்ளனர். பிரதோஷம் மற்றும் சிவன் ராத்திரி போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர்.ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமியை ரயில்வே ஊழியர்கள் குடும்ப விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர்.இங்கு மிகவும் பழமை வாய்ந்த ஒரு வனதுர்க்கை, ஒரு சிவலிங்கம், ஒரு நந்தி என மூன்று சிலைகள் மட்டும் உள்ளது.இங்கு கோவில் கட்ட ரயில்வே நிர்வாகம் ஒப்புக் கொள்ளாததால் இங்கு சிவலிங்கமம், வனதுர்க்கை, மற்றும் நந்திபகவான் திறந்த வெளியில் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். மேலும் நாகர் இரவு நேரங்களில் மட்டும் லிங்கத்தின் மீது அமர்ந்து காட்சி தருவதாகவும், பிதுர் மற்றும் நாகதோஷம் உள்ளவர்களும் இங்கு சிறப்புவழிபாடு நடத்துகின்றனர். மேலும் கோவில் மற்றும் விபரங்களுக்கும் விசேஷ செலவிற்கு உதவி செய்பவர்கள் எழுத்தாளர் பாலாஜிகணேஷ் என்பவரை 9842550844 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.