திருப்புவனம்: திருப்புவனம் அருகே அல்லிநகரம் தண்டீஸ்வர அய்யனார் கோயிலில் நேற்று (மே., 17ல்) காப்புக்கட்டுதல் விழா தொடங்கியது.
அல்லிநகரம் தண்டீஸ்வர அய்யனார் கோயிலில் வரும் 26ம் தேதி வருடாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதனையொட்டி காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடந்தது. காலை 10:00 மணிக்கு அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு காப்பு கட்டுதல் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் காப்புக்கட்டி விரதத்தை தொடங்கினர். தினசரி அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். வரும் 26ம் தேதி காலை 10:30 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு வருடாபிஷேக விழா நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை அல்லிநகரம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் செய்து வருகின்றனர்.