மானாமதுரை : மானாமதுரை அருகே மேலநெட்டூர் சொர்ணவாரீஸ்வரர் சமேத சாந்த நாயகி அம்மன் கோயில் ஆனி பிரமோத்சவ விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
இந்த ஆலயத்தில் ஜூன் 8 ம் தேதி ஆனி பிரமோத்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர்.ஜூன் 15 ம் தேதி சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி அம்பாள் எழுந்தருளினர். சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலை 4:00 மணிக்கு பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது. தேர் நான்கு ரத வீதிகளையும் சுற்றி நிலையை அடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தை கண்டு ரசித்தனர். மானாமதுரை டி.எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.