திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழாவில், அய்யங்குளத்தில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தட்சணாயன புண்ணிய காலம் என அழைக்கப்படும், ஆனி பிரம்மோற்சவம் 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தொடர்ந்து, 10 நாட்களுக்கு கோவிலில், சிறப்பு பூஜைகள், தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில், சுவாமி வீதி உலா நடைபெற்றது. பிரம்மோற்சவ பத்தாம் நாள் விழாவில், அய்யங்குளத்தில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.