தேவகோட்டை: தேவகோட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில் இரண்டாம் ஆண்டு வருஷாபிஷேகம் நடந்தது.சிறப்பு ஹோமம் நடைபெற்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தன. மாலையில் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. சீனிவாசன் விநாயகர் பெருமை பற்றி பேசினார்.