பண்ருட்டி:பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் செடல் மற்றும் திருத்தேர் விழா இன்று (19ம் தேதி) நடக்கிறது.
பண்ருட்டி வைத்திரெட்டிப்பாளையம் படைவீட்டம்மன் கோவிலில், இன்று (19ம் தேதி) ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு செடல் மற்றும் திருத்தேர் உற்சவம் நடக் கிறது. கடந்த 10 ம்தேதி விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, மிருச்சுங்கரணம் நடந்தது. 11 ம் தேதி காலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 12 ம் தேதி முதல் நேற்று 18 ம் தேதி வரை காலை, இரவு உற்சவர் அம்மன் பல்லக்கில் வீதியுலா நடந்தது.இன்று (19ம்தேதி) காலை 6: 00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், 7:30 மணிக்கு சக்திகரகம் எடுக்க கெடிலம் ஆற்றங்கரை செல்லுதல், காலை 11:00 மணிக்கு சக்திகரகம் ஊர்வலம், 11:30 மணிக்கு மாவு விளக்கு எடுத்தல், 12:00 மணிக்கு செடல் உற்சவம், 1:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து வீதியுலா உற்சவம் நடக்கிறது.இரவு 10:00 மணிக்கு மூலவர், உற்சவர் அம்மனுக்கு பால் மற்றும் பன்னீர் அபிஷேகம் நடக்கிறது.