கோபம்... மனிதனுக்கு வரக் கூடாத விஷயம். ஆனால், அது பல சமயங்களில் தன்னையும் மீறி வந்து விடுகிறது. அந்நிலையில் என்ன செய்வது?. ஷைத்தானால் கோபம் வரவழைக்கப்படுகிறது. அவன் நெருப்பைப் போன்றவன். நெருப்பு ஓரிடத்தில் பற்றினால் தண்ணீர் ஊற்றி அணைக்கிறோம். கோபத்துக்கும் சிறந்த மருந்து தண்ணீர் தான். இதனால் கோபம் வந்தால் ’ஒளு’ செய்து கொள்ளுங்கள் என்கிறார் நாயகம். தொழுகைக்குச் செல்லும் முன் முஸ்லிம்கள் ’ஒளு’ செய்வார்கள். அதாவது தண்ணீரால் பாதம், கைகளை கழுவுவர். கோபம் வரும் போது இதைச் செய்தால் மனம் அமைதியாகும்.