சங்கராபுரத்தில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி ஜரூர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2019 01:08
சங்கராபுரம்:சங்கராபுரத்தில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 2ம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பொது மக்களால் பூஜை செய்யப்பட்டு விஜர்சனம் செய்வது வழக்கம்.சங்கராபுரம் பகுதியில் விநாயகர் சதுர்த்திக்காக பாலமேட்டில் ராயர் ரைஸ்மில் வளாகத்தில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி ஜரூராக நடந்து வருகிறது.
இங்கு, சேலம் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்த கருப்பண்ணன் தலைமையில் 10 பேர் சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிழங்கு மாவு, பேப்பர் கூழ், களிமண் போன்றவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் தயாரிக்கப்படுகிறது.ரசாயனமற்ற முறையில் ஒரு அடி முதல் 10 அடி வரை சிலைகள் தயாரிக்கப்படுகிறது. பைக் விநயகர், மயில் வாகன விநாய கர், மாட்டு வண்டி விநாயகர் என பல வடிவங்களில், பல வண்ணங்களில் விற்பனைக் காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.