பழநி, முருகப்பெருமானின் மூன்றாம்படை வீடு என அழைக்கப்படும் பழநி திருஆவினன்குடி கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு, 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பியும், கணபதிபூஜை, சுப்ரமண்யா பூஜையுடன் யாகபூஜைவழிபாடு நடந்தது. உச்சிகாலபூஜையில் குழந்தைவேலாயுதசாமிக்கு சங்காபிஷேகம், பால், பழங்கள் அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது. அடிவாரம் வேளீஸ்வரர் கோயிலில் வருடாபிஷேக யாகபூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது, பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.