பதிவு செய்த நாள்
19
செப்
2019
11:09
ராமநாதபுரம் : அழகன்குளத்தில் விஸ்வர்கமா ஜெயந்தி விழா பாலசுப்பிரமணியர் கோயிலில் கொண்டாடப்பட்டது. விஸ்வகர்மா தலைவர் நித்தியானந்தம், இந்து சமூக துணைத் தலைவர் நாகநாதன், ஓய்வுஆசிரியர்கள் மாணிக்கம், மகாதேவன், யோகேஸ்வரன், குமரேசன், வெற்றி செல்வம், கண்ணன், குணா, மனோஜ் மற்றும் விஸ்வகர்மா சமுதாய மக்கள் பங்கேற்றனர். விஸ்வ பிரம்மாவின் படத்திற்கு மலர் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் செய்துவழிபாடு நடத்தினர்.
சாயல்குடி விஸ்வ கர்மா உறவின்முறைக்கு பாத்தியப்பட்டகாமாட்சி அம்மன் கோயிலில் விஸ்வகர்மாஜெயந்திவிழா கோலாகலமாக நடந்தது. விஸ்வகர்மாவின் உருவப்படத்திற்கு மாலையணிவித்து நெய்விளக்கேற்றிவழிபாடு செய்தனர். மூலவர் காமாட்சியம்மனுக்கு11 வகையான அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, சொர்ண ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை சிவாச்சாரியார் ஹரிராம் செய்திருந்தார். சக்தி ஸ்தோத்திரம், விஸ்வகர்மா போற்றி மந்திரங்கள் முழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விஸ்வகர்மா உறவின்முறையினர் செய்திருந்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.