கோவை: கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவில் தேர்திருவிழா, கடந்த 14ம் தேதி, முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கி, வெகு சிறப்பாக நடந்து வருகிறது.நேற்று இரவு, கோனியம்மன் காமதேனு வாகனத்தில் அமர்ந்து வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. அம்மனின் காமதேனு வாகனம், கோவிலில் இருந்து இசை வாத்தியங்கள் முழங்க புறப்பட்டு, பெரிய கடைவீதி, வைசியாள் வீதி, ராஜவீதி, தேர்நிலைத்திடல் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.இந்த வீதி உலா நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனின் அருளை பெற்றனர்.