உத்தரகோசமங்கை கோயிலில் புரட்டாசி சதுர்த்தசி உற்ஸவம்



உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கையில் உள்ள மங்களநாதர் சுவாமி கோயில் மரகத நடராஜரின் சன்னதி முன்பு புரட்டாசி சதுர்த்தசி உற்ஸவம் நிகழ்ச்சி நடந்தது.


உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள மரகத நடராஜர் சன்னதியின் முன்பாக அலங்கார அபிஷேக பீடம் அமைக்கப்பட்டு அவற்றில் ஆண்டுக்கு ஆறு முறை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது. சித்திரை மாதத்தில் திருவோணம், ஆனியில் உத்திரம், ஆவணியில் சதுர்த்தசி, புரட்டாசியில் சதுர்தசி, மார்கழி திருவாதிரையில் வரக்கூடிய பிரசித்தி பெற்ற ஆருத்ரா தரிசனம், மாசியில் சதுர்த்தசி என உற்ஸவ காலங்களில் ஆண்டுக்கு ஆறு முறை அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது. மரகத நடராஜரின் சன்னதி முன்பாக அமைக்கப்பட்ட பீடத்தில் 16 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் உற்ஸவமூர்த்திகளான கூத்தர் பெருமான் சமேத சிவகாமி அம்மனுக்கு நடந்தது. பின்னர் இரவு 7:00 மணிக்கு உற்ஸவமூர்த்திகளின் உள்வீதி புறப்பாடு நடந்தது. திருவாசகம் உள்ளிட்ட சிவநெறி பாடல்கள் பாடப்பட்டன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்